அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 19 January 2026

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow குஞ்சரம் arrow கைநாட்டு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கைநாட்டு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: முகிலன்  
Wednesday, 06 June 2007

ஐரோப்பிய வாழ்வில் கடனட்டை இல்லாமல் வாழ்வதென்பது முகமற்று வாழ்வதற்கு ஒப்பானது. ‘கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என என்தந்தை கம்பரை சிறுவயதில் அறிமுகப்படுத்தியது எனது ஆழ்மனதில் பதிந்ததொன்று.

இந்த உலகமயமாக்கல் யுகத்தில் நாடுகளை ஆட்டிப்படைப்பது உலகவங்கி என்றால் எமது வாழ்வைத் தீர்மானித்து ஆட்டிப்படைப்பது நடைமுறையிலுள்ள வங்கிகள்தான். வங்கியின் பிடியிலிருந்து விடுபடல் என்பது நடக்கிற காரியமில்லை, தற்கொலைக்குச் சமமானது. வங்கிகளில்தான் உடனுக்குடன் புதிய தொழில்நுட்பமும் அறிமுகமாகும். இப்போது எல்லாத் தொடர்பாடல்களையும் இயந்திரத்தினூடாக மேற்கொள்வதான நடைமுறையும் வந்துவிட்டது. நாங்கள் புலம்பெயர்ந்த காலத்தில் இந்த இயந்திரங்களை வாஞ்சையுடன்தான் தொட்டோம். ஏனென்றால் பழக்கமில்லா மொழியால் கதைத்து சிரமப்படத்தேவையில்லை. அசட்டுச் சிரிப்பும் சிரிக்க வேண்டியதில்லை.

இயந்திரத் தொடுதாளுகை முறையில் கடனட்டைப் பாவனையிலான பண எடுப்புகளில் இனி à®Žà®©à¯à®©à¯†à®©à¯à®© மாற்றம் நிகழலாம்?

நண்பர்களிடையே அலசல் ஆரம்பமாகியது.
- நுண்கமெராக்கள் பதிவுசெய்யலாம்
- குரல் வழியான ஒலிப்பதிவுகள் உறுதி செய்யலாம்
- தேசிய அடையாள அட்டை எண் பதியப்படலாம்
- கடனட்டையிலேயே புகைப்படம் இணைக்கப்பட்டு நுண்கமராவினால் உறுதிப்படுத்தப்படலாம்
என்றவாறாக கருத்துகள் பகிரப்பட்டன. இதில் ஈடுபடாது மௌனமாக இருந்த நண்பன் திடீரெனச் சொன்னான் ‘கடனட்டையே இராது’
‘ஆ.. ஆ... ஆ!’ எல்லோருமே வாயைப் பிளந்தனர்.
‘வங்கியின் கணனித்திரையில் கைநாட்டை வைக்க (வலது பெருவிரல்) அது முழுமையான சாதகத்தையும் தரும். மேலதிக உறுதிப்படுத்தலுக்கு பிறந்த நாளுடனான நவீன பதிவெண்ணை(பெயருக்கான பதிவெண்) கேட்கும். எல்லாமே கையடையாளத்தில் தெரிந்துவிடும்.’ என்றான் அமைதியாக
கேட்க வியப்பாக இருப்பினும் யாராலும் மறுத்துப் பேசமுடியவில்லை.
மொழிகளையும் கடந்து, நாடுகளின் எல்லைகளையும் தகர்த்து, மின்காந்த அலைகளுக்குள் புவியைச் சுருக்கிப் பயணிக்கும் மானுடவாழ்வில், எழுத்தறியாத பாமரர் கையெழுத்தென இகழப்பட்ட கைநாட்டு  நாகரிமாக அறியவியலாக ... இனி என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ?


- பாரீஸ், மே 2007

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)
 


மேலும் சில...
கருமி
சமாதானம்?/திருப்பி அனுப்பப்படுதல்!
உணவகக் குசினி
நேரத்திற்கு பதில் மணிக்கூடு
மீண்டும் தட்டிக்கொடுப்பு
மக்களை கைவிட்ட கடவுள்
செம்மொழி என்றால் என்ன சார்?…. இங்க துட்டு கிடைக்குமா சார்?
இலண்டன் மாப்பிளை - பாரிசில் பிரசவம்!
கிட்டப் பார்த்தால் தெரியாதோ
வீடும் வலியும்
ஊர் சிரிக்குமே!
கடற்புவி அதிர்வும் மானுடரும்!
மடம் வீட்டு வேலை
நச்சுவிதை
வாங்கல் - கொடுக்கல் - தவணைச் செலுத்தல்

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 19 Jan 2026 12:21
TamilNet
The federal framework advanced by the Tamil National People?s Front (TNPF), rooted in the 2016 Tamil People?s Council (TPC) proposals, is presented in that section as preserving Tamil sovereignty and self-determination, while retaining the possibility of a referendum. A closer constitutional reading reveals the opposite. While employing the language of pre-constitutional agreement, inalienable self-determination, sovereignty, homeland, and claims of popular legitimacy through referendum, the framework systematically contracts each of these claims through clause design and enforcement logic. What emerges is not transition, but neutralisation by design.
Sri Lanka: Declaring and disabling: TNPF neutralises Tamil sovereignty, self-determination & referendum


BBC: உலகச் செய்திகள்
Mon, 19 Jan 2026 11:46


புதினம்
Mon, 19 Jan 2026 11:42
















     இதுவரை:  28118047 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2734 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com