அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 03 May 2024

arrowமுகப்பு arrow சமூகம் arrow உள்ளொளி arrow கற்றுணர்தல்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கற்றுணர்தல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கந்தையா நவரேந்திரன்  
Thursday, 20 April 2006

நாங்கள் மாறியிருக்கின்றோம் - முன்னேறியிருக்கின்றோம் - விழிப்புணர்வை  அடைந்திருக்கின்றோம் என்று நாங்களே எங்களை நம்பவைக்கவும்,  சான்றுகள் மூலம் எங்களுடைய மனத்தை ஏற்கும் படிச்செய்யவும்,  மெய்பித்துக்காட்டவும் எங்களுக்குகுச் சாதகமான பின் விளைவோ,  விளைப்பயனோ, பயன்முடிவோ அவசியமாகத் தேவைப்படுகின்றது.

ஓர் ஓட்டப்பந்தயத்தில் இலக்கைச் சென்றடைந்தவனை - ஒரு பயணத்தில்   அடைய வேண்டிய இடத்தைச் சென்றடைந்தவனை, தனது முயற்சியில்  வெற்றியீட்டியவனாக - முடிவிடம்  சேர்ந்தவனாக ஏற்றுக்கொள்ளத்தான்  வேண்டும். கட்புலனுக்குத் தென்படக்கூடிய புறம் சார்ந்த செயற்பாடுகளாகிய  இவற்றை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் மனத்திற்குள் நிகழும் அகம் நோக்கிய பயணத்தில் இலக்கு என்றோ, சென்றடைய வேண்டிய இடமென்றோ எதும் கிடையாது. இந்த அகப் பயணத்தில் ஒருவர் தனது இலக்கை - வினைப் பயனை - பெறுபேறை அடைந்து விட்டார் என்றால், அவர் ஆரம்பித்த  இடத்திலேயே இருந்துகொண்டிருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.  அதாவது, அவர் தனது மனத்தை கடக்கவில்லை என்றுதான் பொருள். அவர்  எவ்வளவு காலம் இப்பயணத்தைச் செய்து கொண்டிருக்கின்றார் என்பதல்ல  பிரச்சினை. அகப்பயணம் காலத்தைச் சார்ந்ததல்ல. மனத்தால்  உருவாக்கப்பட்டது தான் காலம். காலத்தால் உருவாக்கப்பட்டது தான் மனம்.  காலத்தையும் மனத்தையும் உருவாக்கியது எண்ணம். மனத்தைக் கடப்பது  என்பது காலத்தையும் எண்ணத்தையும் கடப்பதாகும். ஒருவரால் தனது  மனத்தின் அசைவை - செயற்பாட்டை எவ்வித பலாபலனும் எதிர்பாராமல்,  முழுமையான கவனத்துடன் அவதானிக்க முடியாவிட்டால், அவரால்  மனத்தைக் கடக்க முடியாது போய்விடும். ஏதாவது ஒரு மனப்புள்ளியையோ  - ஓர் எண்ண இலக்கையோ நோக்கிப் போவதனால் அவராகவே தனக்குள்  தான் போய்சேருமிடம் பற்றிய உணர்ச்சி முனைப்புடைய உணர்வு விழிப்பு  நிலையை ஏற்படுத்திக் கொள்கின்றார். இது, பணிவை - அடக்கத்தை ஒருவர்  தனது பழக்கத்திற்குள் கொண்டுவரும் ஒரு வகை ஏமாற்று வேலையாகவே  இருக்கும். அவர், தான் பகட்டில்லாமல், தற்பெருமையில்லாமல் பணிவாக  இருப்பதாகத் தனது உணர்வு விழிப்பு நிலையில் உணர்வாரேயானால், அவர்  பணிவான நிலையில் இல்லை என்பது தெளிவாகிறது. இவரும்  இவரைப்போன்றோருமே நிலையான மகிழ்ச்சியையும்,  நிரந்தரப்பேரின்பத்தையும், கழிபேருவுகையையும், முக்தியையும்,  நிர்வானத்தையும் அடைவதில் நாட்டம் கொண்டிருப்பர்.

'கற்றுணர்தல்' (Learning)  என்பதில் இலக்கு இல்லை. மையப்படும்  இடமில்லை. புனித நுல்களினூடாகவோ, தத்துவ ஞானிகளின்  போதனைகளினூடாகவோ, மெய்ஞ்ஞானிகளின் மறை உரைகளினூடாகவோ  பெறப்பட்ட அறிவையெல்லாம் தனது மனத்தில் சேமித்து  வைத்துக்கொண்டும், ஒப்பீட்டு ரீதியாகத் தாம் ஏற்கனவே அறிந்து  வைத்திருப்பவற்றோடு அடையாளங்கண்டு களித்துக்கொண்டும், அறிவு சார்ந்த அமைப்பு முறைப்பயிற்சியில் ஈடுபடுபவர்களே உலகில் அதிகமாக உள்ளனர்.  அது அவர்களுடைய தனிப்பட்ட மாயை சார்ந்த பிரச்சினை. தாங்கள் பெற்ற  அறிவை ஒப்புவமை காட்டல் - ஒப்பீடு செய்தல் - ஒப்பீடான மதிப்பீடு  செய்தல் என்பது எல்லாம் அவர்களது  ' தான் '  என்ற முனைப்புக்குத்  திருப்தியளிக்கின்றபடியால் தான் அவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டும்  பொழுதைக் கழித்துக்கொண்டுமிருக்கிறார்கள். இலக்கல்லா அகப்பயணத்தில் '  கற்றுணர்தல் ' என்ற அசைவு மட்டுமே இருக்கும். வாழ்வின் அழகு அந்த  அசைவிலேயே பிரகாசிக்கின்றது.

நாம் எமது அகப்பயணத்தில் எய்த வேண்டிய இலக்கென்று ஒன்றை நாமே  நிர்ணயித்துவிட்டு, அதனை அடைந்து விட்டோமென்று  வைத்துக்கொள்வோமேயானால், அதற்கு மேல் எதுவுமே இராதே?  வியாபரத்தில் மட்டுமல்லாது, நாம் செய்யும் ஒவ்வொரு கருமத்திலும் எமது  இலக்கை அடைந்துவிட்டோமேயானால், எமக்கு மிஞ்சப்போவதெல்லாம்  திருப்தியற்ற மனக்குறைவும், செயல் குலைவும், கையாறும் மட்டுந்தானே?  இலக்கு என்ற ஒன்று இல்லாத போது, கற்றணர்தலுக்கான அசைவு மட்டுமே  இருக்கும். இந்த அசைவில் அறிவைச் சேமித்தல் என்பது ஒரு சுமையாக -  தடையாக - வலியாக இருக்கும்.

ஓர் ஆற்றைப்போல், மனமாது எப்பொழுதும், இடைவிடாது, ஓய்வொழிவின்றி,  ஓயாது தன்னை மடிப்பு அவிழ்வுடன் திறந்து வைத்துக்கொண்டு '  கற்றுணர்தல் ' என்ற அசைவை மட்டும் நிகழ்த்திக் கொண்டிருக்குமானால்  அது விளைவை - விடையை நாடாது. மூடப்பட்ட மனமே விடை காண  முனையும்.
 


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 03 May 2024 20:23
TamilNet
HASH(0x55dd9be48848)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 03 May 2024 20:23


புதினம்
Fri, 03 May 2024 20:23
















     இதுவரை:  24855591 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1659 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com