அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 03 May 2024

arrowமுகப்பு arrow சமூகம் arrow உள்ளொளி arrow கனவுகள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கனவுகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கந்தையா நவரேந்திரன்  
Friday, 03 March 2006

பகல் வேளைகளில் எம்மால் மேற்கொள்ளப்படும் சிந்தித்தல்-இயங்குதல் போல,இரவுவேளைகளில் கனவு காணுதலும் உயிர் வாழுதலுக்கு ஆதாராமானது என உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.கனவு காணாவிட்டால் ஒருவருடைய நாளாந்த வாழ்க்கை உளவியல் அழுத்தத்திற்கும் நலிசோர்விற்கும் ஆளாக நேரிடுமெனவும் அவர்கள் சொல்கின்றனர். நித்திரையின்போது சில வேளைகளில் ஏற்படும் உறங்குபவரது கண்ணிமைகளின் அசைவுகள், அவர் புதுவலுவுண்டாக்கும் கனவுகளைக்காண்கின்றார் என்பதனைனக் குறிக்குமென்றும்,அது மூளைக்குத் தெளிவை ஏற்படுத்துகின்றதென்றும் கூட உளவியல் வல்லுநர்கள் சிலரால் கூறப்படுகின்றது. கனவுகளின் மொழி எதற்காகக் குறியீட்டு அடைமொழியாக இருக்கின்றது என்ற வினாவுடன்,கனவு பற்றி இப்பொழுது ஆழமாகப் பார்ப்போம்.

மனிதர்களாகிய நாம் உபயோகிக்கும் எமது மொழியே ஒரு வகையான குறியீட்டு அடைமொழிதானே? நாம் எமது கருத்துப் பரிமாற்றத்திற்குக் குறியீட்டு அடையாளங்களைப் பயன்படுத்தப் பழக்கப்பட்டுவிட்டோம். மரத்தின் விம்பத்தினூடாகவே நாம் மரத்தைப் பார்க்கின்றோம். அயலவரைப்பற்றி நாம் கொண்டுள்ள விம்பத்தினூடாகவே அவரைப் பார்க்கின்றோம். எப்பொருளையும், நாம் அது பற்றிக்கொண்டுள்ள விம்பங்களினூடாகவும், கருத்துகளினூடாகவும், முடிவுகளினூடாகவுமே பார்க்கின்றோம். இவை அனைத்தும் குறியீட்டு அடையாளங்களே. எம்மால் எதையுமே நேரடியாகப் பார்க்கத்தெரியாமல் மிகவும்  சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அது போலே கனவுகளிலும் குறியீட்டு அடையாளங்கள் ஒரு பெரிய பங்கை வகிக்கின்றன. இதனால் பாரிய ஏமாற்று முறையும் ஆபத்தும் ஏற்படுகின்றன. கனவு என்பது குறியீட்டு அடையாளங்களைக் கொண்டுள்ளது என்பதை நாம் புரிந்துகொண்டு, அவற்றின் மறைகுறியீடுகளின் பொருளை விளங்கிக் கொள்ள முயன்றாலும் எந்தக் கனவின் அர்த்தமும் எமக்குத் தெளிவாகத் தெரிவதில்லை.

சொற்களும் குறியீட்டு அடையாளங்கள் தான் என்பதை உணராமல்,நாம் காணும் எதனைப் பற்றியும் உடனடியாகவே பேசத்தொடங்கி விடுகின்றோம்.இது எங்கள் வழக்கமாகிவிட்டது. தொழில் நுட்ப விடயங்களில் இருப்பதுபோன்று நேரடிச் செய்தி இணைப்போ, நேரடித்தொடர்போ, நேரடி அறிவிப்பு முறையோ, மனிதத்தொடர்புகளிலும் புரிதல்களிலும் இல்லை. யாராவது எம்மைத் தாக்கும்போது எமக்குக் குறியீட்டு அடையாளங்கள் தேவையில்லை. அது ஒரு நேரடி அறிவிப்பாகும். இது ஒரு முக்கியமான விடயமாகும். மனம் எதையும் நேரடியாகக் காண-பார்க்க மறுக்கின்றது. சொல்லும்,குறியீட்டு அடையாளமும் இல்லாமல் தன்னைப்பற்றித்தானே தெரிந்து கொள்ள மனம் மறுக்கின்றது. உதாரணமாக,ஒருவர் வானம் நீலமாக உள்ளது என்று கூறுனாரென்றால், உடனே நாம் நீலம் பற்றிய எமது சொந்தத் தொடர்பை - உறவை -பொருத்தத்தை - குறிப்பீட்டை வைத்துக்கொண்டு அதன்படி அதன் பொருளை விளங்கிக்கொண்டு, சொன்னவரிடம் எமது சொந்த இன்மைக்குறியை - வெறுமைக்குறியைப் பயனோ மதிப்போ ஏதுமற்ற புரிதலை ஒப்படைக்கின்றோம். இப்படி நாம் குறியீட்டு அடையாளங்களோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். எமது கனவுகளும் குறியீட்டு அடையாளங்களோடு தான் சம்மந்தப்பட்டுள்ளன.

எம்மால் எதையும் சொறிகளில்லாமல் - முடிவுகளில்லாமல் - குறியீட்டடையாளங்கள் இல்லாமல்- பாரபட்சமில்லாமல் நேரடியாகவும் உடனடியாகவும் பார்க்கமுடியாது இருப்பதற்குக் காரணமென்ன?

மூளையின் செயற்பாட்டில் ஒரு வெறுமையான- விளக்கமற்ற எதிர்ச்செயலே உள்ளது. அது 'நான்" என்ற மையத்திலுள்ள பாதுகாப்புகளோடும், தடைகளோடும், தப்பியோடல்களோடும், அச்சங்களோடுமே செயற்பட்டுக்கொண்டிருக்கும். விழித்திருககும் வேளைகளில் எதனையும் நேரடியாகப் பார்க்கும் வல்லமையற்றவர்களாக நாம் இருப்பதனால் எமது கனவுகளும் குறியீட்டு அடையாளங்களையே கொண்டுள்ளனவாக இருக்கின்றன. இது மூளையின் இரண்டற நீங்காத உள்ளியல்பாயிருக்கின்ற செயற்பாடாக இருக்குமோ என்ற ஐயப்பாடு எமக்கு எழலாம். ஓருயிர் போல் இயங்கும் அமைப்பைக்கொண்ட மூளையின் உடல் ரீதியான பாதுகாப்புக்கு ஆழமான-நிலையான தேவைப்பாட்டுக்கு மட்டுமே உள்ளியல்பு உள்ளது. இத்தேவைப்பாடு தவிர்க்கமுடியாதது,நிலையானது,ஓரளவு நிரந்தரமாது. ஆனால் உளவியல் நிலையோ மாறத்தக்கது. உளத்தை - உயிரைக் காப்பதற்கான மூளையின் ஏற்பாடுதான் குறியீட்டு அடையாளங்கள். இது முற்றுமுழுதாக எண்ணத்தின் செயற்பாட்டு முறையாகும். 'நான்" என்பது ஒரு குறியீட்டு அடையாளமேயன்றி, அது உண்மையானதல்ல. 'நான்" என்பதன் குறியீட்டு அடையாளத்தை உருவாக்கிய பின்னர் எண்ணம்,தனது முடிபுகளுடனும், தனது சுருக்க விதிமுறைகளுடனும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு தன்னைப் பாதுகாக்கதொடங்கிவிடும். இதிலுpருந்து தான் சகல துன்பங்களும் அவலநிலைகளும் வருகின்றன.

கனவுகளைப் பற்றி வியாக்கியானங்கள் கூறுவோரும் உள்ளனர்.முழிப்பாக இருக்கும் வேளைகளில் காணும் பொருளிலிருந்து காண்பவன் வேறாக இருப்பான். அது போலவே கனவிலிருந்து அதனைக் காண்பானும் வேறுபட்டவன்.தன்னிலிருந்து தனது கனவு வேறானது என்று கனவு காண்பவன் நினைப்பதனாலேயே கனவு கண்டவனுக்கு தான் கண்ட கனவு பற்றி வியாக்கியானம் தேவைப்படுகின்றது. ஆனால் கனவாது கனவு காண்பவனை விட வேறானதா? காண்பவனும் காணப்படும் பொருளும் ஒன்றானால், வியாக்கியானத்திற்குத் தேவையென்ன? இதனை நாம் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும். நாம் காணும் பொருளைக் காண்பானிடமிருந்து வித்தியாசப் படுத்துவதனாலேயே வியாக்கியானம் என்ற  பிரச்சினையும்,பிணக்கும்,அதனோடு ஒட்டிய பல பிரச்சினைகளும் எழுகின்றன. இந்தப்பாகுபாடு-பிரிவு ஒரு மாயை,குழுக்களுக்கிடையே- இனங்களுக்கிடையே - தேசங்களுக்கிடையே காணப்படும் பிரிவுகளும் போலியானவை. ஆனால் நாம் பெயர்களாலும் அடையாளங்களாலும் பிரிவுபடாத உயிருருக்கள். அடையாளங்கள் முக்கியமானவையாகும் போதுதான் பிரிவு நிகழ்கின்றது. இந்தப் பிரிவு நிகழும் போதுதான் போர்களும் சச்சரவுகளும் போராட்டங்களும் நிகழ்கின்றன.

 à®•à®©à®µà®¿à®©à¯ உள்ளடக்கத்தை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? அதற்கு ஏதாவது முக்கிய த்துவம் உள்ளதா? யாராவது ஓர் ஆளையோ,ஒரு சம்பவத்தையோ கனவு காணுகின்றோம் என்றால்,அது தற்செயலாகக் காணப்படுகின்ற நிகழ்வா? காண்பவன் ஒருவன், காணும் பொருளிலிருந்து, தான் வேறுபட்டவன் என்று நினைக்கும்போதுதான், தனக்கு அப்பாலுள்ளது பற்றி விளங்கிக் கொள்ள முயலுவான். இதுவே அவனுக்குள்ளும் நிகழ்கின்றது நிகழ்கின்றது. காண்பவன் தன்னால் காணப்படும் பொருளைப் புரிந்துகொள்ள முயலும்போது, அவன் தன்னைத்தானே புரிந்துகொள்ளத் தானே முயல்கின்றான் என்பது தானே பொருள்? ஆனால்,காண்பானே காணும் பொருளாக இருக்கும்போது, அங்கே வெறுமனே அவதானிப்பு மட்டுமே நிகழும். அங்கே புரிந்து கொள்ளுதல் என்ற விடயத்திற்கே இடமில்லை.

 à®•à®©à®µà®¿à®²à¯ புரிந்து கொள்வதற்கு ஏதோ உள்ளது என்று சொல்லும்போது, எமது கனவில் தீர்க்கப்படாத ஏதோவொன்று உள்ளது என்றும், அதனை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் நாம் எமக்கே கூறிக்கொள்கிறோம் என்றுதானே பொருள். 'புரிந்துகொள்ளல்" என்ற சொல்லை உபயோகிக்கும்போதே, அதில் இருபொருல் வாதத்திற்குரிய செயற்பாங்கு உட்கிடையாய் உள்ளது என்பது தெளிவாகத் தெரியவந்துவிடும். 'நான்" என்ற ஒன்றும், 'புரிந்துகொள்ள வேண்டியது;" என்ற ஒன்றும் இருப்பதாக நாம் நினைக்கின்றோம். ஆனால் உண்மையில் அவை இரண்டும் ஒன்றேதான். எனவே நாம் கனவில் தேடும் அர்த்தமானது எமது பிணக்கின் செயற்பாடேயாகும்.

 à®•à®©à®µà¯ காண்பவன் 'நான்". கனவு காண்பவனாகிய நான், தான் கண்ட கனவின் முக்கியத்துவத்தைப் பார்க்க விரும்புகின்றான். தான் பார்க்க விழையும் முக்கியத்துவம் அவனது கண்டுபிடிப்பு- அவனது உந்தல் தான். எனNவு இவை இரண்டும் பொய்யானவை. காண்பவனாகிய ஒருவன், தன்னை வேறானதாகச் சிந்திக்கும் போது, இந்தப் பொய் உண்மைபோல் தோன்றும்.

 à®®à®©à®¤à¯à®¤à®¿à®©à¯ வெளிப்பாடுகள் யாவையும் கூறுபட்ட மனத்தின் வெளிப்பாடுகளேயாகும். ஒவ்வொரு கூறும் தன் சொந்த வழியில் மற்றக்கூறுகளோடு முரண்படும். ஒரு கனவு இன்னொரு கனவையும், ஓர் ஆசை இன்னோர் ஆசையையும்,ஒரு செயற்பாடு இன்னொரு செயற்பாட்டையும் முரண்படுத்தும். மனமாது இந்தக் குழப்ப நிலையிலையே வாழ்ந்துகொண்டிருக்கின்றது. ஒரு செயற்பாடும், ஓர் ஆசையும் இன்னொரு செயற்பாட்டையும், ஆசையையும் புரிந்துகொள்ள விழைவதுபோல்,மனத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியைப் புரிந்து கொள்ள வேண்டும்மெனச் சொல்லும். எனவே ஒவ்வொரு கூறுக்கும் சொந்தமான ஒரு காண்பாணும், சொந்தமா ன ஒரு செயற்பாடும் உண்டு. உடனே இவற்றிற்கெல்லாம் மேலான ஒரு மேலான காண்பான் என்பவன் இக்கூறுகள் அனைத்தையும் ஒருவித ஒத்திசைவுக்குக் கொண்டு வர முயலுவான். இந்த மேலான காண்பானும் (ளரிநச ழடிளநசஎநச-ம்) மனத்தின் ஒரு கூறுதான். இந்த முரண்பாடுகளும், பிரிவினைகளும், தான் கனவுகளைப் பிறப்பிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட கனவைப் புரிந்துகொள்ளவதோ அதற்கு வியாக்கியானம் அளிப்பதோ அல்ல நாம் எதிர்நோக்கும் பிரச்சினை. இந்தக் கூறுகள் யாவுமே ஒரு முழுமைக்குள் உள்ளன என்பதை நாம் காணவேண்டும் என்பதே நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளாகும்.அப்படிப்பார்க்கும்போது, நாம் முழுமையான கூறு என்று இல்லாமல், நாமே முழுமை என்பதைக் காண்போம்.

 à®µà®¿à®´à®¿à®ªà¯à®ªà¯ நிலை என்பது முழு மனித இனத்திற்கும் உரியது. விழிப்பு நிலை என்பது எந்த ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கும் உரியதொரு நிலையல்ல. ஒரு குறிப்பிட்ட மனிதனின்; விழிப்பு நிலை என்று வரும்போது அது சிக்கலையே தோற்றுவிக்கும். இந்தச் சிக்கல் கூறுகளையும், முரண்பாடுகளையும், போர்களையுமே உருவாக்கும். விழிப்பு நிலையில் மனிதனின் வாழ்வில் முழுமையான அசைவு பற்றிய விழிப்பு இருக்கும்போது, கனவுகளுக்கான தேவை இருக்கமாட்டாது. இந்த முழுமையான விழிப்பும்- அவதானமும் கூறுபோடுதலையும் பிரிவினையையும் முடிவுக்கு கொண்டுவரும். எவ்விதமான பிணக்குகள் இல்லாதபோது கனவுகளுக்குத் தேவை ஏற்படாது. 

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)
 

 


 


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 03 May 2024 17:19
TamilNet
HASH(0x559953654310)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 03 May 2024 17:19


புதினம்
Fri, 03 May 2024 17:19
















     இதுவரை:  24855426 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1813 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com