அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 26 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 23 arrow இரண்டு கவிதைகள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


இரண்டு கவிதைகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: க.வாசுதேவன்.  
Thursday, 12 January 2006

1.
இலக்கியம்.
 
என் கருப்பையில் தரித்த
எந்தக் குழந்தையும்
பிறப்பெடுத்ததில்லை.
ஜனனத்தைப் பிடிவாதமாய்
மறுத்தது என் உடல்.
ஆனாலும் ஒரு குழந்தைக்காய்
தவித்தது என் தாய்மை.

தத்தெடுத்துப் பாசம் வைத்த
பின்னர்தான் தெரிந்தது என்
குழந்தை முகமூடியணிந்திருக்கும்
விடயம்.

மிடுக்கான அழகான ஆண்குழந்தை.
வளர்ந்து வரும் வேளையில்
ஓவ்வொரு தடவையும்
அவன் எனக்குச் பொய்சொன்னான்.
பொய்யைத் தவிர வேறெதையும்
எனக்கு அவன் சொன்னதாக
ஞாபகமில்லை.

பொய் கூறுவது இப்போ
அவனுக்குக் கலையாகிவிட்டது.
இப்பொழுதெல்லாம் திருடவும்
ஆரம்பித்து விட்டான்.

பொய்கூறவும் திருடவுமே தெரிந்த
முகமூடியணிந்த என் வளர்ப்புப்
பிள்ளைக்கு நான் இலக்கியம்
என்று பெயரிட்டிருக்கிறேன்.

 

2.


"டேபிள் ரெனிஸ்"

அர்த்தப்பக்கத்தில் அடிவாங்கி
அபத்தப்பக்கம் போய் விழுந்தேன்.
அபத்தப் பக்கத்தில் அடிவாங்கி
அர்த்தப்பக்கததில் போய் விழுந்தேன்.

நடுவில் நின்று பார்த்துக்
கொண்டிருந்தது யதார்த்த வலை.

29.11.2005.

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 26 Apr 2024 11:03
TamilNet
HASH(0x55b65eb4ccc0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 26 Apr 2024 11:03


புதினம்
Fri, 26 Apr 2024 11:03
















     இதுவரை:  24813891 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 9102 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com