எழுதியவர்: அ.பாலமனோகரன்
|
|
|
Thursday, 10 February 2005
முதற் பதிப்புக்கான ஆசிரியர் முன்னுரை
நான் வன்னி மண்ணிலே பிறந்தவன். இங்கு வாழும் மக்கள் மிகவும் எளிமையானவர்கள். இருண்ட காடுகளின் மத்தியிலே சிதறிக் கிடக்கும் பல குளங்களையொட்டி அமைதியான சூழலில் எளிமை நிறைந்த வாழ்க்கை நடத்தும் இவர்களைத்தான் என்னுடைய கதைகளிலே அதிகமாகச் சந்திக்க முடியும்.
என்னுடைய பிறந்த மண்ணையும், அங்குவாழ் மக்களையும் மிகவும் அதிகமாகக் காதலிப்பவன் நான். அந்தக் காதலின் விளைவுகளில் இந்தக் கதையும் ஒன்று!
இப்படிக் காதலிக்க எனக்குக் கற்றுக் கொடுத்தவர் எழுத்தாளர் வ.அ. இராசரத்தினம் அவர்களே. அவருக்கும், இந்த நாவலை எழுதுமாறு ஊக்குவித்த உள்ளுர் இலக்கிய நண்பர்களுக்கும் இதைப் புத்தக வடிவில் வெளியிட்டுப் பேருதவி செய்த வீரகேசரி தாபனத்தாருக்கும், விசேடமாக திரு. எஸ். பாலச்சந்திரன் அவர்களுக்கும் எனது மனங்கனிந்த நன்றிகள்!
அ.பாலமனோகரன் (இளவழகன்) 02.05.1973 |