அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 20 May 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 5 arrow இந்தப் புல்வெளி
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


இந்தப் புல்வெளி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தவ சஜிதரன்  
Sunday, 19 September 2004

புல்லின் சிலிர்ப்புக்காகவே
புலர்வு தரிக்குமிப் பூமி.

நீர்த்துளிச் சிதறல் தாங்கும்
இந்த நீள்வெளி கண்ட கணத்திருந்து,
அண்டச் சுழற்சியில்
அதுவே உண்மையாகுக.

பூக்களை நான் நேசிக்கிறேன் -
அவற்றின் அழகுத் திரட்சியால்
ஆனால்,
புல்வெளி கண்டு மூர்ச்சிக்கிறேன் -
இந்த மௌனப் புரட்சியால்!

இழிகுணத்தவரையெல்லாம்
"புல்"லரென்று சொல்லாதீர்!
இந்தப் புல்வெளிப் பச்சை -
பூமித் தாயின்
மானங் காக்கும் மார்புக் கச்சை.

புற்கள் புரியும்
நீலவான் நோக்கிய நிஷ்டையில்
கடவுள் கவிதையாய்ப் பிறத்தல் காண்கிறேன்.

இது
சலனம் ஒடுங்கிய ஒளியின்
ஜனனத் தேசம்.
நேற்றுநான் கண்ட
பூதங்களும் பேய்களும்
இவ்விடத்தில்லை.

இங்கு
மரணம் நேரினும் கலக்கமன்று.
இந்தப் புல்வெளியில்
அந்தியில் ஆயுள் முடிக்கும்
பூக்களைப் போலவே நானும்
புதையுண்டு, மீண்டும்
புற்களின் வேர்களாய்த் துளிர்ப்பேன்.


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 20 May 2024 03:25
TamilNet
HASH(0x55e60ed536c0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 20 May 2024 03:25


புதினம்
Mon, 20 May 2024 03:25
















     இதுவரை:  24909528 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3381 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com