17.01.2002 - 23.01.2002
Sunday, January 14th, 200717.01.2002 வியாழன் காலை 8.45
இத்தனை அழகான விடியலை நான் பார்த்து நீண்ட காலம் ஆயிற்று. மனம் மகிழ்ந்தது. தலையில் தண்ணீர் ஊற்றினேன். வெண்முகில்களை ஊதித்துடைத்தாற்போல வானின் நீலம். நிமிர்ந்து பார்த்தேன். கண்கள் கூச கைகளால் கண்களைப் பொத்தினேன். கடல் கடந்து பறந்து சென்ற சிட்டுக்குருவிகளெல்லாம் மீண்டும் சிறகடித்து மரங்களில் அமர்ந்திருக்கின்றன. “உய்க் உய்க்” என்று ஒலியெழுப்பியபடி மரங்களில் தாவித்திரிகின்றன. யன்னல்களை அகலத்திறந்துவிட்டேன். வீசிய காற்று முகத்தில் அறையவில்லை. இதமாக வருடிச் சென்றது. எனது யன்னலோர மரத்தில் கூட ஆயிரம் மொட்டுகள் முளைவிட்டிருக்கின்றன. எனது நண்பன் சொல்வான். “ஆசிய நாட்டு மக்களுக்கு தோலைச் சுட்டெரித்த சூரியன் பின் வரும் மழைக்காலம் மிகவும் பிடித்ததொன்று. ஐரோப்பியர்களுக்கு காதுகளை பிய்த்தெடுக்கும் பனிக்குப் பின் முளைவிடும் மொட்டுக்காலம் இருக்கிறதே! மரங்களுக்கு மட்டுமல்ல மனிதருக்கும் உயிர் வந்து சேரும் காலம் அது. கலைந்த மனதிற்கு மருந்து அது.” (more…)