16.11.2001 - 27.11.2001
Sunday, May 28th, 200616.11.2001 வெள்ளி சாமம் 2.10
நள்ளிரவு மெல்லத் தேய கண்மூடினால் தெரியும் கறுப்புபோல் இருள் சூழ்கிறது. ஆழ்ந்து தூங்கும் பற்றைகளிலிருந்து பூச்சிகளின் சத்தம் மட்டும் கேட்கிறது. “இந்தச் சாமத்தில் போகப் போகிறாயா?” என்று கண்கள் விரிய கேட்டேன். “நிறைய படிக்க இருக்கு. நான் போயாக வேண்டும்” என்று சொல்லி பிறப்பட்டாள் ஜூலியா, “எனக்கு புரிகிறது. ஆனால் கவனமாகப்போ” என்று அனுப்பி வைத்தேன்.
மாலை 6.30க்கு என் வீட்டிற்க்கு வந்தவள் சாமம் இரண்டு மணிக்கு போகிறாள். வெறுமனே அவள் வரவில்லை. மலை உச்சியின் குளிர்மையை மனம் முழுதும் சுமந்து வந்தாள். வீடு முழுதும் தன் கால் பதித்தாள். மகிழ்வைத் தொற்றவைத்தாள்.வயிறு நிறைய சாப்பிட்டாள். நிறைய பேசினாள். சுழல் சுழலாக சாமம் வரை பேச்சு தொடர்ந்தது. அவள் பேசுவதை பார்க்க வேண்டும். உதடு மட்டும் அல்ல, உடலின் அனைத்தும் பேசும். புறப்படுவதற்க்கு சற்றுமுன் “ஒரு தேனீர் போட்டுத்தா நான் போகிறேன்” என்றாள். வெளிவாசல் வரை கூடச் சென்றேன். (more…)