Archive for April, 2006

01.11.2001 - 07.11.2001

Tuesday, April 25th, 2006

பனி கலந்த காற்று. புகை படிந்த வானம். நீலம் இல்லை. ஒளியும் இல்லை. குளிர் காலம் இது தானா ?

01.11.2001 வியாழன் இரவு 10:45

அர்த்தமற்று கழிந்துவிட்ட ஒரு மாலையை நினைத்து என்னையே திட்டிக் கொண்டிருந்தேன், ஆறு மணிக்கு அரசியல் கருத்தரங்கு (Podium Discussion) ஒன்றிற்கு  நண்பர்களுடன் சென்றிருந்தேன். பல்கழைக்கழகத்தின் மிகப் பெரிய அரங்கில்(Auditorium) அது நடைபெற்றது. “ஆப்கானிஸ்தான் போரில் ஏனைய நாடுகளின் பங்களிப்பு” என்ற தலைப்பில் இரண்டு பேராசிரியர்கள் மற்றும் மூன்று அரசியல்வாதிகள் தமது கருத்துக்களை முன் வைக்க முயன்று பாதை மாறி எங்கோ சென்றனர். (more…)

25.10.2001 - 31.10.2001

Monday, April 3rd, 2006

25.10.2001 வியாழன் இரவு 11.20

மனதில் ஒரு நினைவு மழையாய் பெய்கிறது. வெறும்தூறல் அல்ல. அந்த சாரலில் முழுதாக தோய்ந்துவிட்டேன். அப்போ எனக்கு 6 வயது. யாழ் இந்து மகளிர் பாடசாலையின் முதலாம் வகுப்பு மாணவி. அன்றைய மாலை இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. எங்கள் பாடசாலையில் சரஸ்வதி பூசை. அதனை தயார் செய்யும் குழுவில் நானும் இருந்தேன். மாலையானது. புதிதாக தைத்த வெள்ளைப்பாவாடை, வெள்ளைச்சட்டை, கை நிறைய வெள்ளைக்காப்புகள், பவுடர்போட்டு, பொட்டு வைத்து, பாவாடை காலில் அரைய வீட்டை சுற்றி பூத்திருந்த அனைத்தையும் பிடுங்கி ஒரு தட்டில் வைத்து பாடசாலை சென்றேன். செல்ல முன் என்னை முற்றத்தில் வைத்து படம் எடுத்தார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தேவாரங்கள் கேட்டன. அந்த நாளுக்கே உரியதொரு வாசம் காற்றில் கலந்திருந்தது. வடையும், அவலும் கலந்த வாசம் அது. (more…)

19.10.2001 - 23.10.2001

Saturday, April 1st, 2006

19.10.2001 வெள்ளி இரவு 8.10

செமினார் (Seminar) முடிந்து வீடு செல்கிறேன், நன்றாக இருட்டி விட்டது.பேருந்தில் ஏறி அமர்ந்து “வால்காவிலிருந்து கங்கைவரை” புத்தகத்தை எடுக்கிறேன், படிக்க முடியவில்லை, மனதில் ஏதோ ஓர் அதிர்வு இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. சிந்தனைகள் சங்கிலித் தொடராக தலைக்குள் சுற்றுகின்றன, கேள்விகள் கால் முளைத்து உடலில் அலைந்து திரிக்கின்றன, புத்தகத்தை மூடுகிறேன். நான் நேசித்த நகரமா இது? இருளில் பயமின்றி நடந்து திரிந்த பாதைகளா இவை? சிறைபோல் ஆகிவிட்டதே ! பால் நிலவினில் கருமுகில்கள் படிந்தது போல் நகரமெங்கும் இரும்பு சட்டங்கள், துப்பாக்கியும் காக்கிச்சட்டையுமாக பாதையெங்கும் காவல் அதிகாரிகள், செமினாருக்கு போகுமுன்னே அதிர்ச்சி மேல் அதிர்ச்சிகள். (more…)

14.10.2001 - 18.10.2001

Saturday, April 1st, 2006

ஓம் என்று சொல்லிவிட்டாய் ஓடிவந்துவிட்டேன்

14.10. 2001 ஞாயிறு இரவு 10.15

இந்த இரவும் இருளும் அழகுதான். மெல்லிய காற்று, நிலவற்ற வானம், இருளிலே உறங்கும் ஊர். உன்னோடு பேச இதுவே உகந்த நேரம் குளித்துவிட்டு காய்ச்சிய பாலுடன் என் மேசைக்கு ஓடி வந்துவிட்டேன். என்னைக் கொஞ்சம் பேச விடு!

இன்றைய நாள் பற்றி அல்ல. நேற்று இராப்பொழுதுபற்றி உன்னோடு நிறைய பேச வேண்டும். ஒரு திரைக்காவியம் என்னை இப்படி கட்டிப்போட்டுவிட்டதே! முழங்கால் மடித்து, கைகள் இரண்டும் அதனை இறுக அணைத்து, புருவம் சுருங்கி, மனமதிர, கண்களில் ஈரம் கசிய முக்கி, மூழ்கி எழுந்த கணங்களை சற்று நினைத்துப் பார்க்கிறேன். அது Cast Awayஎன்னும் திரைப்படம். வெறும் திரைப்படம் எனும் கண்ணுடன் இதனைப் பார்க்காதே! எனக்குப் பிடிக்கும் என்று நேற்று மாலை வீடு வந்து சேர்ந்தது அத்திரைக்காவியம். நீ அதனை பார்த்துவிட்டாயா? இதனை மட்டும் என்னை சொல்லவிடு. (more…)