பத்மநாப ஐயருக்கு இயல் விருது
|
|
|
|
எழுதியவர்: என். கே. மகாலிங்கம்
|
|
|
Sunday, 13 March 2005
கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும் ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து வழங்கும் 2005 ஆம் ஆண்டிற்கான 'இயல் விருது' இம்முறை, திரு பத்மநாப ஐயருக்கு அளிக்கப்படுகின்றது. அவரின் தமிழ்த்தொண்டு வகைமைப்பாட்டிற்குள் அடங்க மறுக்கும் அதேவேளை, பலர் கால் பதிக்காத புதிய தடம்.
ஏற்கெனவே சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன் ஆகியோர் இயல் விருது பெற்றவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஒருவர் தமிழுக்கு ஆற்றிய வாழ்நாள் சேவைக்காக 'இயல் விருது' வழங்கப்படுகிறது. இவ்விருதுடன் 1500 கனடிய டொலரும்ää 2005 ஜூன் மாதம் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் அளிக்கப்படும் என்பதை இலக்கியத் தோட்டம் அறியத்தருகின்றது.
நாற்பது ஆண்டுகளாகப் பல தியாகங்களுக்கு மத்தியில், தன்னலமற்று, முழுநேரப் பணி போல, ஈழத் தமிழ்நூல் வெளியீடு, தொகுப்பு வெளியீடு, ஈழ எழுத்தாளர்களைப் பொதுநீரோட்டத்திற்கு அறிமுகம் செய்தல், ஆங்கிலத்தில் தமிழ்ப் படைப்புக்களை மொழியாக்கம் செய்யவைத்துப் பிரசுரித்தல், எழுத்தாளர்களை லண்டன் வரவழைத்து கலந்துரையாடல்கள் செய்தல் என்று பலவகையில் இவர் செயலாற்றியுள்ளார்.
தகவல்:என். கே. மகாலிங்கம்
கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம்
மின்னஞ்சல்: mahalingam3@hotmail.com
|