அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 April 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 6 arrow வாசகரை எட்டத்தில் தள்ளலாமா?
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வாசகரை எட்டத்தில் தள்ளலாமா?   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தெரிதல்  
Sunday, 13 February 2005
தெரிதல்"நான் சொல்கிறேன் என்பதாலேயே நீ ஏற்றுக்கொள்ளாதே; உன் பகுத்தறிவினால் நான் சொல்வதையெல்லாம் கேள்விக்கு உரியதாக்கு; உனக்கு நீயே ஒளியாக இரு!" - புத்தர்

எரிந்த சிதைவுகளின்மேல் கம்பீரமாய் எழுந்துநிற்கிறது, யாழ்.பொது நூலகம். முன்னர் இருந்திராத நவீன வசதிகளையும் அது கொண்டிருக்கிறது! ஆயினும் என்ன, இலகுவான வழிமுறைகளில் வாசகரிற்குப் பயன்படுமானால் தான் ஒரு நூலகத்திற்குச் சிறப்புச்சேரும். செய்தித்தாள் படிப்பதானாலும்,  ஒவ்வொரு ஆண்டும் ரூபா 50ரூ செலுத்தி அனுமதி பெறவேண்டும். நூல் இரவல்பெறும் பகுதியில் உறுப்பினராக, முதலில் 625 ரூபா செலுத்தவேண்டும் - பின்னர் ஆண்டு தோறும் 275ரூபா செலுத்தவேண்டும்! இந்த நடைமுறை பலரிற்குச் சிரமத்தையே ஏற்படுத்துகிறது. வாசிப்புப் பழக்கத்தை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, வாசகரை எட்டத்தில் தள்ளிநிற்குமாறு செய்கிறது. சென்ற மாசிமாதம் வாசகரின் பயன் பாட்டிற்காக இந்த நூலகம் திறந்துவைக்கப்பட்ட போதிலும், இரவல்பெறும் பகுதியின் உறுப்பினர் எண்ணிக்கை இன்றுவரை நூற்றுக்குள்தான் என்ற பரிதாபநிலை, இதனை உறுதிப் படுத்துகிறது.பொது நூலகம் பணவருவாயைத் திரட்டுதற்குரிய ஒரு நிறுவனமல்ல. மாறாக பொதுமக்களின் அறிவு வளர்ச்சிக்கு உதவும் முக்கிய 'சேவை நிலையம்' என்பதை உணர்ந்து இக்குறைபாட்டைச் சீர்செய்ய, சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் முயல்வார்களா?

அடுத்த இதழ், முதலாம் ஆண்டுச் சிறப்பிதழாக 16 பக்கங்களில் வெளிவரும். விலையில் மாற்றமில்லை. 'தெரிதல்' இல் வெளியாகும் விடயங்களிற்கு சன்மானம் வழங்கப்படுகிறது. கட்டுரைகள், குறிப்புகள், கவிதைகள், சிறிய கதைகள், ஒளிப்படங்கள் வரவேற்கப் படுகின்றன. ஆக்கங்கள் கையெழுத்தில், A-4 அளவு தாளில் இரண்டு பக்கங்களுள் அமைதல் வேண்டும். 'படிப்பகம்' பகுதியில் வெளியிட வேண்டுமானால் நூலின் ஒரு பிரதியை அனுப்ப வேண்டும். சந்தா முடிவடைந்தவர்கள் புதுப்பித்துக் கொள்ளவும். ஆறு இதழ்களுக்கான சந்தா 50ரூபா. அனைத்துக் காசுக்கட்டளைகளும் அ.யேசுராசா என்ற பெயரில், வண்ணார் பண்ணை அஞ்சலகத்தில் மாற்றும் வகையில் எடுக்கப்பட்டு அனுப்பப்படவேண்டும்.
 
'தெரிதல்'
இல. 1, ஓடைக்கரை வீதி,
குருநகர், யாழ்ப்பாணம்.


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 25 Apr 2024 16:59
TamilNet
HASH(0x5620939450a0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 25 Apr 2024 16:59


புதினம்
Thu, 25 Apr 2024 16:59
















     இதுவரை:  24805780 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4574 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com